தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) இரவு பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில் பிரசார வாகனத்தில் இருந்தபடி எடப்பாடி பழனிசாமி பேச உள்ளாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.மனோகரன், பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா, ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா ஆகியோரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









