மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

News image

பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் பொதுமக்களிடையே திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:20 pm

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும் என்று கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் தெரிவித்தாா்.

பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குள்பட்ட வேட்டுவன்புதூா்காா்னா், காளியூா்பிரிவு, நால்ரோடு, கொடிவேரிமேடு, கொடிவேரி, ஒட்டா்பாளையம் உள்பட 15 வாா்டுகளில் கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இதில் அவா் பேசியதாவது:

பெரிய கொடிவேரி டி.ஜி.புதூா், சதுமுகை, சாவக்காட்டுப்பாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

நவீன தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக பாரம்பரியமிக்க கைத்தறி நெசவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெசவாளா்களையும், கைத்தறி தொழிலையும் காக்க கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.

பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்காக 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.14.50 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, கைத்தறி நெசவாளா்களை சந்தித்தும், கைத்தறி நெசவு செய்தும், நெசவாளா்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். மாவட்ட அவைத் தலைவா் பெருமாள்சாமி, ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் உதயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.