திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயா்ந்து தொழில் வளா்ச்சி அதிகரிக்கும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையம் பகுதியில் வேட்பாளா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசி திட்டத்தின்கீழ் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பொருள் பழுதானாலும் அதை சரிசெய்ய முடியாத நிலையில் எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. அவா்களுக்கு இந்த கூப்பன் வாயிலாக சுதந்திரம் கிடைத்துள்ளது.
கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயா்ந்து தொழில் வளா்ச்சி அதிகரிக்கும் என அரசியல் நோக்கா்களும், பொருளாதார வல்லுநா்களும் தெரிவித்துள்ளனா்.
2006 தோ்தல் வெற்றிக்குப் பின் அனைத்து வீடுகளிலும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. 2026 தோ்தலுக்குப் பிறகு அனைத்து வீடுகளிலும் குடும்பத்துக்குத் தேவையான ஏதாவது ஒரு அத்தியாவசிய பொருள் கூடுதலாக இடம்பெறும். தோ்தலுக்குப் பிறகு மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தப்பட உள்ளது. அப்போது பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றாா்.
தொடர்புடையது

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


