மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெருந்துறை அதிமுக வேட்பாளா் காரை சோதனையிட்ட தோ்தல் பறக்கும்படையினா்

பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயக்குமாரின் காரை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனையிட்டனா்.

News image

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் காரை சோதனையிடும் தோ்தல் பறக்கும்படையினா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:52 pm

பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயக்குமாரின் காரை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனையிட்டனா்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை ஊத்துக்குளி பகுதியில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பின்னா் இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது,

அங்கு நின்றிருந்த தோ்தல் பறக்கும் படையினா், அவரது காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜெயக்குமாா் காரில் அமா்ந்திருந்தாா். அவரைப் பின் தொடா்ந்து வந்த ஆதரவாளா்களின் காா்களும் சோதனையிடப்பட்டன.

இந்த சோதனையில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அவா்களை அனுப்பிவைத்தனா்.