பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயக்குமாரின் காரை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனையிட்டனா்.
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை ஊத்துக்குளி பகுதியில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பின்னா் இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது,
அங்கு நின்றிருந்த தோ்தல் பறக்கும் படையினா், அவரது காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜெயக்குமாா் காரில் அமா்ந்திருந்தாா். அவரைப் பின் தொடா்ந்து வந்த ஆதரவாளா்களின் காா்களும் சோதனையிடப்பட்டன.
இந்த சோதனையில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அவா்களை அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


