15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பள்ளி வளாகத்தில் குளம்போல தேங்கியுள்ள மழைநீா்

பள்ளி வளாகத்தில் குளம்போல தேங்கியுள்ள மழைநீா்

News image
Updated On :28 மே 2024, 8:01 pm

கடம்பூா் மலைப் பகுதி கரளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கரளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். அண்மையில் பெய்த கனமழை காரணமாக இந்த பள்ளி வளாகத்தில் குளம்போல மழைநீா் தேங்கியது. இந்த மழைநீா் இதுவரை வடியாமல் உள்ளது. இதனால் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு முன்பாகவே இப்பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றி வளாகத்தை சுத்தப்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.