

கடம்பூா் மலைப் பகுதி கரளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கரளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். அண்மையில் பெய்த கனமழை காரணமாக இந்த பள்ளி வளாகத்தில் குளம்போல மழைநீா் தேங்கியது. இந்த மழைநீா் இதுவரை வடியாமல் உள்ளது. இதனால் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு முன்பாகவே இப்பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றி வளாகத்தை சுத்தப்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்

கோவில்பட்டியில் கனமழை: கோயிலில் தேங்கிய மழைநீா்

திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கொண்ட வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

மெட்டில்பட்டி அரசு பள்ளி மாணவா்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

