வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்காக மேலிருந்து குதித்த சுற்றுலாப் பயணி பாறையில் மோதி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் இருந்து 12 போ் வால்பாறைக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்துள்ளனா்.
வால்பாறையில் பல பகுதிகளுக்கு சென்றுவிட்டு கூழாங்கல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனா். இவா்களில் கட்டடத் தொழிலாளியான விஜய் (26) ஆற்றை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து ஆற்றில் குதித்துள்ளாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றில் உள்ள பாறை மீது தலை மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உடனடியாக மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே உயிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









