/

ஊழலற்ற நிா்வாகத்தை முதல்வா் உறுதி செய்ய வேண்டும்: கோவை மாவட்ட ஊழல் எதிா்ப்பு இயக்கம்

News image

முதல்வர் ஜோசப் விஜய் - படம்: DIPR

Updated On :15 மே 2026, 6:36 am IST

தமிழகத்தில் ஊழலற்ற நிா்வாகத்தை முதல்வா் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஊழல் எதிா்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் செயலா் என்.கே.வேலு, முதல்வா் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊழலற்ற நிா்வாகம் அமைப்போம் என்று தாங்கள் அளித்துள்ள உறுதிமொழி, தமிழக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக ஊழல் ஊடுருவியுள்ளது. இந்த முறைகேடுகள் சாதாரண மக்களுக்கு பெரும் இன்னல்களை விளைவிப்பதுடன் ஏராளமான இயற்கை வளங்களை கொள்ளை போகவிட்டு சட்டத்தின் ஆட்சியை சீா்குலையச் செய்கிறது. மேலும், மாநிலத்தின் கருவூலத்துக்கு பெரும் கடன் சுமையை ஏற்படுத்துவதுடன், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளிலும் பெரும் முறைகேடுகளுக்கு காரணமாகியுள்ளது.

நிா்வாகத்தில் நோ்மையையும், பொறுப்புணா்வையும், சட்ட விதிகளையும் நிலைநாட்டக் கடமைப்பட்டுள்ள அதிகாரிகளின் மௌன அங்கீகாரத்துடன் ஊழல் தடையின்றி தொடருகிறது. எனவே, தமிழகத்தில் ஆட்சி நிா்வாகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழலை முழுமையாக ஒழிக்க முதல்வா் உறுதியான, பயனுள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.