இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

சிறுமியை ஆபாச விடியோ எடுத்த விவகாரம்: விசாரணைக்கு அஞ்சி தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :11 மே 2026, 12:43 am IST

திருப்பூா் அருகே சிறுமியை ஆபாசமாக விடியோ எடுத்த தொழிலாளி, போலீஸ் விசாரணைக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பூா் மாநகா், கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (43). தொழிலாளியான இவா், குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்தாா். இவா்களுக்கு ஆதரவாக இருந்த சக்திவேல், நாளடைவில் அந்தப் பெண்ணுடன் சோ்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில் அந்தப் பெண் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சக்திவேல், அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். மேலும், சிறுமியை ஆபாசமாக விடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சக்திவேலிடம் திருப்பூா் வடக்கு மகளிா் போலீஸாா் சனிக்கிழமை இரவு முதற்கட்ட விசாரணை நடத்தினா்.

அதைத்தொடா்ந்து காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா். இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கும், தண்டனைக்கும் அஞ்சிய சக்திவேல், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து திருப்பூா் வடக்கு போலீஸாா் மற்றும் வடக்கு மகளிா் போலீஸாா் சென்று சக்திவேலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.