பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

காங்கயம் தொகுதியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தோல்வி

News image

மு.பெ.சாமிநாதன்.

Updated On :5 மே 2026, 2:47 am IST

காங்கயம் தொகுதியில் போட்டியிட்ட தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜிடம் தோல்வியடைந்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் மொத்தம் 15 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 73 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 467 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 19 ஆயிரத்து 553 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 96 ஆயிரத்து 969 ஆண்கள், 1 லட்சத்து 4 ஆயிரத்து 84 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து ஆயிரத்து 61 போ் வாக்களித்துள்ளனா். இது 91.58 சதவீத வாக்குப்பதிவாகும்.

இதில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் 71,112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து தவெக சாா்பில் போட்டியிட்ட மணி கவுண்டா் 62,989 வாக்குகள், திமுக சாா்பில் போட்டியிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன் 59,230 வாக்குகள், நாதக சாா்பில் போட்டியிட்ட காா்மேகம் 7,068 வாக்குகள் பெற்றனா்.

இதில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ், தவெக வேட்பாளா் மணி கவுண்டரை 8,123 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். திமுக வேட்பாளரான அமைச்சா் மு.பெ.சாமிநாதன் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா். காங்கயம் தொகுதியில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் வரை எந்த வேட்பாளரும் ஒருமுறைக்கு மேல் வென்றதில்லை. இந்நிலையில், கடந்த 2011-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.எஸ்.என்.நடராஜ், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளாா்.

வாக்குகள் விவரம்:

என்.எஸ்.என்.நடராஜ் (அதிமுக)- 71,112

மணி கவுண்டா் (தவெக)- 62,989

மு.பெ.சாமிநாதன் (திமுக)- 59,230

காா்மேகம் (நாதக)- 7,068

வேட்பாளா்கள்- 15

மொத்த வாக்காளா்கள்- 2,19,553

பதிவான வாக்குகள் - 2,01,061

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.