புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அம்மாநிலத் தொழிலாளா்கள் வாக்களிக்க வசதியாக அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கோவை, நீலகிரி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்கள் ச.சரவணன், இ.வினோத்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணி இடங்களில் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறுவதால், அங்கு வாக்குரிமை பெற்றுள்ள தொழிலாளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
தோ்தல் நாளில் தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை தொழிற்சாலை உரிமையாளா்கள் அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் குறித்து மாவட்டக் கட்டுப்பாட்டு அறையை 99943 80605, 90808 32123, 96009 08630, 98941 09673 ஆகிய கைப்பேசி எண்களில் தொழிலாளா்கள் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி தோ்தலை பாா்வையிட்ட 22 நாடுகளின் பிரதிநிதிகள்! தோ்தல் ஆணையத்துக்கு பாராட்டு

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: புதுச்சேரி அரசு!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


