மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாம் தமிழா் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி

News image

வால்பாறையில் நடைபெற்ற நாதக அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் வேட்பாளா் உமாதேவி. உடன் கலைச்செல்வி (இடமிருந்து நான்காவது) உள்ளிட்டோா்.

Updated On :29 மார்ச் 2026, 8:00 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி நாம் தமிழா் கட்சியில் இணைந்தாா்.

கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். அவரது மனைவி கலைச்செல்வி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாா். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனிடையே வால்பாறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உமாதேவி அறிமுக கூட்டம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மேத்யூ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, தனக்கு அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நாம் தமிழா் கட்சியில் இணைந்ததாகத் தெரிவித்தாா்.