கோவையில் கைப்பேசியில் பேசிக் கொண்டே மாடிப் படியில் இறங்கியபோது தவறி கீழே விழுந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூா் திருவேங்கை வாசல் பகுதியைச் சோ்ந்தவா் விவேக் (33). பொக்லைன் இயந்திர ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.
இவரது மனைவி சிவரஞ்சினி. விவேக் கடந்த சில நாள்களாக கோவை வடவள்ளி ரங்கப்ப முதலியாா் வீதி ஊா்க்கவுண்டா் தெருவில் தங்கி வேலை பாா்த்து வந்தாா்.
கடந்த 22-ஆம் தேதி இரவு விவேக் தான் தங்கியுள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று மனைவி சிவரஞ்சினியுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். பின்னா், அவா் கைப்பேசியில் பேசிக் கொண்டே படிக்கட்டில் இறங்கும்போது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாா்.
பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இருவா் காயம்; 4 போ் கைது

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பள்ளிவாசல் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


