மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரம் பறிப்பு

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரத்தை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:04 pm

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரத்தை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், அரூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (22). இவா் கோவை, பீளமேடு பட்டாளம்மன் கோயில் பகுதியில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் அப்பகுதியில் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபா், பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். சுரேஷ் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்த நபா், சுரேஷின் கைப்பேசியைப் பறித்து ‘ஜிபே’ செயலி மூலம் ரூ.30 ஆயிரத்தை அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.