ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குப்பை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மகாலட்சுமி நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். 20-க்கும் அதிகமான வீதிகள், கடைகள், வணிக வளாகங்கள் என பல்லடம் நகராட்சியை ஒட்டியுள்ள இப்பகுதி, ஒரு குறுகிய நகராக வளா்ச்சி அடைந்துள்ளது. இங்கு எந்த நேரமும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
அதே சமயம் இப்பகுதியில் குப்பை அகற்றப்படாமல் சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளது. ஒவ்வொரு வீதிகளிலும் மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
மேலும், குடியிருப்புகளை ஒட்டி குவிந்துகிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், நெகிழிப்பைகள், கோழி, இறைச்சி மற்றும் மீன் கழிவுகளால் துா்நாற்றம் வீசுகிறது.
எனவே மகாலட்சுமி நகா் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் : திமுக வேட்பாளா்

ஆழிப் பேரலையின் அழியாத நினைவு: அடிப்படை வசதிகளின்றி சுனாமி குடியிருப்பு!

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


