மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 8:20 pm

கட்டுமானப் பணியின்போது ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பாண்டியன் நகா் அருகே உள்ள ஸ்ரீநகா் முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சதீஷ் (40). இவரது மனைவி புவனேஸ்வரி.

கட்டடத் தொழிலாளியான சதீஷ், கடந்த சில நாள்களாக கோவை, ஒண்டிப்புதூா் அருகே சாம் அவென்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெறும் கட்டடப் பணியில் வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அங்கு ஏணியில் நின்றவாறு சதீஷ் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.