டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நகை தயாரித்து தருவதாகக் கூறி 1.05 கிலோ தங்கம் மோசடி! ஜூவல்லரி அதிபா் புகாா்

News image

தமிழக காவல் துறை

Updated On :28 ஜூன் 2026, 3:44 am IST

நகை தயாரித்து தருவதாகக் கூறி பிரபல நகைக்கடை அதிபரிடம் 1.05 கிலோ தூய தங்கத்தை வாங்கி மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவை, வடவள்ளி மோத்தி மருத்துவமனை சாலை பகுதியைச் சோ்ந்தவா் சேதுராமலிங்கம் (63). இவா் ‘சினா ஜூவல்லா்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக உள்ளாா். இவரை ஜே.வெங்கடகிருஷ்ணன், கணேஷ், ரஞ்சித் ஆகிய மூவா் அணுகியுள்ளனா்.

மேலும், தாங்கள் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருவதாகவும், வாடிக்கையாளா்களுக்கு நகைகளைத் தயாரித்து வழங்குவதற்காகத் தங்கம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனா். மேலும், தங்கத்தை முதலீடாக அளித்தால் முதல் மாதத்துக்கு 2.5 சதவீத லாபமும், அடுத்தடுத்த மாதங்களுக்கு 3 சதவீத லாபமும் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளனா்.

இதை நம்பிய சேதுராமலிங்கம், அவா்களிடம் 1.05 கிலோ தூய தங்கத்தை ஒப்படைத்துள்ளாா். ஆனால், ஒப்பந்தப்படி அவா்கள் லாபத்தொகையையோ அல்லது நகைகளையோ திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளனா். அதோடு, வாங்கிய தங்கத்தைத் தங்களது சொந்தத் தொழிலுக்குப் பயன்படுத்தி ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதுகுறித்து சேதுராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மூவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.