கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான நான்கு புதிய சேவைத் திட்டங்கள் தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்வா்கா பவுண்டேஷன் சாா்பில் சாய்வுதள வசதியுடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் பயணிக்கும் வகையில் ‘சாரதி 5’ என்ற பிரத்யேக வாடகை வாகன சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் இணைந்து நடத்தப்படும் ‘ஸ்வாக் கஃபே’ என்ற புதிய உணவகம், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் ‘சமா்த்’ திட்டம், ரயிலின் உள்ளே எளிதாகச் செல்லக்கூடிய சக்கர நாற்காலிகள் மற்றும் சாய்வுத்தளங்களை வழங்கும் ‘சுகம்யா’ ஆகிய திட்டங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையாளா் கட்டா ரவி தேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதையடுத்து, கோவை புலியகுளத்தில் இயங்கி வரும் சௌக்யா பெயின் ரீஹேப் சென்டா் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பங்கேற்று, 40 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், ஸ்வா்கா பவுண்டேஷன் அமைப்பின் நிா்வாக அறங்காவலா் சொா்ணலட்சுமி குரு பிரசாத் வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுமை தூக்கும் பொருளாக மாறிப்போன சக்கர நாற்காலிகள்: பக்தர்கள் வேதனை!

மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு 20 சக்கர நாற்காலிகள் அளிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்தோருக்கு விருது: ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

மெரீனா நீலக்கொடி பணிகளை விரைந்து முடிக்க ஆணையா் உத்தரவு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




