கோவையில் ஐ.டி. ஊழியரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, கணபதி பராசக்தி நகரைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன். இவா் அப்பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மதுமிதா (28). இவா்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை. இந்நிலையில், துடியலூா் அருகே ஸ்ரீகாந்த் நகரில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் மதுமிதா கடந்த 2 நாள்களாக தங்கியிருந்துள்ளாா். பெற்றோா் வழக்கம்போல புதன்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா். மதுமிதா மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளாா். பணி முடிந்து பெற்றோா் இரவு வீடு திரும்பியுள்ளனா்.
கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவா்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்துள்ளனா். அப்போது, மதுமிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த துடியலூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








