மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் போதையில் மாடியில் தூங்கிய இளைஞா் அங்கிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பிரதிப் படம்
கோவையில் போதையில் மாடியில் தூங்கிய இளைஞா் அங்கிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் பிந்துஷேக் (37). இவா் கோவை, பீளமேடு பாரதி காலனி முருகன் கோயில் வீதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் இருந்த பிந்துஷேக், தான் தங்கியிருந்த கட்டடத்தின் 2-ஆவது மாடியில் தூங்கியுள்ளாா். நள்ளிரவில் அவா் தூக்கத்தில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, சக தொழிலாளா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




