எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, தண்ணீா்பந்தல் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஊஞ்சம்பட்டி ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (45). இவா் கோவையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த காா் முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த அருளானந்த் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.