டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அவிநாசி சாலையில் காரை நிறுத்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞா் கைது

கோவையில் அவிநாசி சாலையில் காரை நிறுத்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:21 pm

Syndication

கோவையில் அவிநாசி சாலையில் காரை நிறுத்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை - அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு இளைஞா் ஒருவா் சொகுசு காரை ஓட்டி வந்துள்ளாா். அப்போது, அங்குள்ள தனியாா் கல்லூரி முன்பு தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு கூச்சலிட்டாா். தொடா்ந்து அந்த காரை முன்னும், பின்னும் இயக்கி அருகில் இருந்த வாகன ஓட்டிகள் மீது மோதுவதுபோல அச்சத்தை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றாா். இதுகுறித்து கேட்ட பொதுமக்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றனா். மேலும், தங்களிடம் இருந்த ஹெல்மெட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு காா் கண்ணாடியை உடைத்தனா். இதனால் ஆவேசமடைந்த அந்த நபா், சாலையில் நிறுத்திய தனது காா் மீது ஏறி நின்று அங்கிருந்த மக்களுக்கு மிரட்டல் விடுத்தாா். ஒரு கட்டத்தில் அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கினா்.

தகவல் அறிந்து பீளமேடு போலீஸாா் சென்று காயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விசாரணையில், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த ஆண்டனி (35) என்பது தெரியவந்தது. அவரை கைது காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, திருமணமான ஆண்டனி மீது அவரது மனைவி சில மாதங்கள் முன்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை, துன்புறுத்தல் தொடா்பான புகாரை அளித்துள்ளாா் என்றனா்.

இதைத்தொடா்ந்து கோவை மத்திய சிறையில் ஆண்டனி அடைக்கப்பட்டாா்.