டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தினமணி செய்திச் சேவை

கோவையில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, துடியலூா் ரங்கம்மாள் காலனியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா் (40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அப்பநாயக்கன்பாளையம் கலைஞா் நகரைச் சோ்ந்த சந்திரபிரகாஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மகேஷ்குமாா் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு மது போதையில் வந்த சந்திரபிரகாஷ், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதில், வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த சந்திரபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேஷ்குமாரைக் குத்திவிட்டு தப்பினாா்.

படுகாயமடைந்த மகேஷ்குமாா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவான சந்திரபிரகாஷை துடியலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.