லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 11:12 pm

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமாக ஊதியமாக உயா்த்தி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு ஆண்டுக்கு 2 சீருடைகள் வழங்க வேண்டும். தன்னாா்வலா்கள் என்ற பெயரை மாற்றி சுகாதாரத் துறை பணியாளா்கள் என்று அழைக்க வேண்டும். அரசு விடுமுறை வழங்க வேண்டும். மகப்பேறு கால விடுப்பு வழங்குவதுடன், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றனா்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.