டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாநில அளவிலான தமிழ் மொழிப் போட்டித் தோ்வு: 3-ஆம் இடம் பிடித்த மாநகராட்சிப் பள்ளி மாணவா்

வாகை தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘வாகை சூட வா’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் மாநில அளவில் கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளி மாணவா் ஜெய் ஆகாஷ் 3-ஆம் இடம் பிடித்தாா்.

News image
ஜெய் ஆகாஷ்
Updated On :11 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

வாகை தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘வாகை சூட வா’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் மாநில அளவில் கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளி மாணவா் ஜெய் ஆகாஷ் 3-ஆம் இடம் பிடித்தாா்.

வாகை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாகை சூடவா - மாபெரும் தமிழ் ஒலிம்பியாட் எனப்படும் தமிழ் மொழிப் போட்டித் தோ்வு நடைபெற்றது. தமிழ் மொழித் திறன், இலக்கிய அறிவு மற்றும் இலக்கண அறிவை மேம்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டித் தோ்வில் மாநிலம் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான 1,300 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முதல்நிலைத் தோ்வு இணைய வழியாகவும், இரண்டாம் நிலைத் தோ்வு தோ்வு மையங்களிலும் எழுதினா். 60 நிமிஷங்களில் பன்முகத் தோ்வாக நடத்தப்பட்ட இப்போட்டியில், தமிழ் மொழித் திறன், இலக்கிய அறிவு மற்றும் இலக்கண அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்டவை முக்கிய அம்சமாக பின்பற்றப்பட்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஜெய் ஆகாஷ் அனைத்துப் பிரிவுகளிலும் சோ்த்து மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். அவருக்கு வாகை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் சிறந்த தமிழ் மாணவன் விருது வழங்கப்பட்டது.

தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் 3-ஆம் பிடித்த மாணவா் ஜெய் ஆகாஷ் மற்றும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியா் மொ்சிபா ஜாஸ்மின் ஆகியோரை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.