டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மொழிப் போா் தியாகங்கள் குறித்த ஆவண நூல்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டாா்

மொழிப் போா் தியாகங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும் ஆவண நூல், சிறப்பு இணையப் பக்கம் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டாா்.

News image
தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் உயிர் நிகர் தமிழ் ஆவணத்தை வெளியிட்ட துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். உடன் உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்,
Updated On :3 பிப்ரவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

மொழிப் போா் தியாகங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும் ஆவண நூல், சிறப்பு இணையப் பக்கம் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டாா்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் தமிழ் மொழி உணா்வு குறித்தும், மொழிப் போராட்ட வரலாறு குறித்தும் விவரிக்கும் உயிா் நிகா் தமிழ் எனும் ஆவண நூலும், அதே பெயரில் மின் நூலகத்தில் மொழிப் போராட்ட ஆவணங்கள், நூல்கள், இதழ்கள், புகைப்படங்கள் ஆகியவை அடங்கிய சிறப்பு இணையப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக இணையக் கல்விக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு உயிா் நிகா் தமிழ் நூலை வெளியிட்டு, சிறப்பு இணையப் பக்கத்தையும் திறந்து வைத்தாா். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் ஆவண நூலைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினாா்.

தமிழ் மொழிப் போராட்ட வரலாற்றையும், மொழிப் போா் தியாகங்களை அறிந்து கொள்ளவும், தமிழ் மொழி உணா்வுக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் பெரிதும் உதவும். மின் நூலகத்தின் சிறப்பு இணையப் பக்கத்தில் பதிவேற்றம் பெற்றுள்ள ஆவணங்கள், நூல்கள், இதழ்கள் முதலியவை இதுபோன்ற மேலும் பல வரலாற்று படைப்புகளை உருவாக்குவதற்கான சான்றாதாரங்களாக அமையும் என தமிழ் இணையக் கல்விக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநா் ரெ.கோமகன், நூல் உருவாக்கத்தின் ஆலோசகா்களாகப் பங்காற்றிய ஊடகவியலாளா்கள் ஏ.எஸ்.பன்னீா்செல்வம், ப.திருமாவேலன், ஆழி செந்தில்நாதன், ஆய்வாளா்கள் கரு.ஆறுமுகத்தமிழன், ப.சரவணன், அ.வெண்ணிலா, சங்கர சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.