/

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார் பற்றி...

News image
மாணவிகள் விடுதி, டாஸ்மாக்காக மாற்றவிருக்கும் மண்டபம்
Updated On :3 பிப்ரவரி 2026, 9:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: கோவையில் தமிழக அரசின் மாணவிகள் விடுதிக்கு அருகே திறக்கப்படவிருக்கும் புதிய டாஸ்மாக் பாருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தமிழக அரசின் சமூக நீதி விடுதியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், மாணவிகளின் விடுதிக்கு முன்புறமுள்ள திருமண மண்டபத்தை டாஸ்மாக் கிளப்பாக மாற்றுவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Story image

இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, டாஸ்மாக்கை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.