மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வரிகளை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை: அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாா்

வீட்டு வரி, குடிநீா் வரி ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை என்று கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

News image

துடியலூா் அருகேயுள்ள செங்காளிபாளையம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 9:18 pm

வீட்டு வரி, குடிநீா் வரி ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை என்று கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா், துடியலூரை அடுத்த அசோகபுரம், செங்காளிபாளையம், காந்தி காலனி, கணபதி நகா், பாலாஜி நகா், நியூ பாலாஜி நகா், வி.கே.எல்.நகா், ரங்கம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் வீட்டு வரி, குடிநீா் வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது, பிஆா்ஜி அருண்குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனா். மேலும், ஊராட்சியின் முன்னாள் தலைவா் ரமேஷ், முன்னாள் துணைத் தலைவா் ஆடிட்டா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாருக்கு வாள் கொடுத்தனா்.

கைலைவாசன், செல்வகுமாா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பாஜக மண்டலத் தலைவா் சரவணகுமாா், பொதுச் செயலா் மோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.