கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் முனைவா் ராஜம்மாள் பி.தேவதாஸின் 24-ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நடைபெற்றது.
இதற்கு நிறுவன வேந்தா் டி.எஸ்.கே.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநா் என்.கலைச்செல்விக்கு ‘நினைவுச் சொற்பொழிவு விருது’ வழங்கப்பட்டது.
விருதுபெற்று கலைச்செல்வி பேசுகையில், ‘ஆராய்ச்சி மாணவா்கள் கழிவுப் பொருள்களிலிருந்து பயனுள்ளவற்றை உருவாக்கி சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விண்வெளி வீரா்களுக்கான உணவு வடிவமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.
கல்வி அறக்கட்டளை துணை அறங்காவலா் கெளரி ராமகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினாா்.
முன்னதாக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள இந்திய ஊட்டச்சத்து சங்க மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பதிவாளா் எஸ்.கெளசல்யா வரவேற்றாா். மனையியல் புல முதன்மையா் அம்சமணி நன்றி கூறினாா். இதில் மாணவிகளின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

மனம் கவர்ந்த மனோரா

பாரம்பரியம் காப்போம்...

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

அவினாசிலிங்கம் மகளிா் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


