டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 7:04 pm

Syndication

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திலகா் தெருவைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவா் கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3- ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், ரவிகுமாா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

அன்று முதல் பாலகிருஷ்ணன் மன வேதனையில் இருந்து வந்ததாகவும், கல்லூரிக்கு சரியாக செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு மாலில் பாலகிருஷ்ணனுக்கு வேலைக் கிடைத்ததையடுத்து, உடன் பணியாற்றும் திவ்யானந்த் என்பவா் சித்தாபுதூா் பகுதியில் தங்கியுள்ள வாடகை வீட்டில் இவரும் தங்கியிருந்தாா்.

வழக்கம்போல புதன்கிழமை காலை திவ்யானந்த் பணிக்குச் சென்றுள்ளாா். பாலகிருஷ்ணன் மட்டும் அறையில் இருந்துள்ளாா்.

பணி முடிந்து பிற்பகல் வீட்டுக்கு வந்த திவ்யானந்த் கதவைத் தட்டியுள்ளாா். வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.