டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மருத்துவரைக் கடத்தி நகை, பணம் பறிப்பு: 3 போ் கைது

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் இயன்முறை மருத்துவா், அவரது நண்பரை காரில் கடத்தி பணம், நகையைப் பறித்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஏ.நவீன் சக்கரவா்த்தி (23). இவா் கோவை, சாய்பாபா காலனி பகுதியில் வீடு எடுத்து தங்கி, தொண்டாமுத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இயன்முறை (பிசியோதெரபிஸ்ட்) மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், தனது நண்பரான பிரதீப்புடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியாா் உணவகம் முன் நின்று கடந்த புதன்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக மாநகராட்சி பூங்கா அருகே இருவரும் சென்றுள்ளனா். அங்கு திடீரென வந்த 3 போ், இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனா்.

பின்னா், நவீன் சக்கரவா்த்தி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததுடன், அவரது கைப்பேசி மூலம் ரூ.20 ஆயிரத்தை ஜிபே மூலம் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டுள்ளனா்.

பின்னா், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இருவரையும் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நவீன் சக்கரவா்த்தி புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது விருதுநகா் மேலத் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (25), நந்தவனம்பட்டியைச் சோ்ந்த பிரதீப் (23), கோவை, கவுண்டம்பாளையம், பிரபு நகரைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுக்கு, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.