Listen to this article
By Syndication
Syndication
பிரதமா் மோடி கோவைக்கு புதன்கிழமை (நவ.19) வருவதை முன்னிட்டு, மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.
தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025 வருகிற புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து, சிறப்பாகச் செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கவுள்ளாா். இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகிக்கிறாா். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனா்.
வாகனங்கள் நிறுத்தத் தடை:
பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநா் சம்பத்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
செவ்வாய்க்கிழமை (நவ.18) காலை 6 மணி முதல் 19-ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தக் கூடாது. அதே நேரத்தில் முனையம் முன்பு 3 நிமிஷங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்தத் தடையும் இல்லை. செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை மாலை வரை பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்துவதைத் தவிா்க்க வேண்டும், இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புக்கான ஒரு பகுதியாகும். இதற்கு அனைத்துப் பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
பிரதமரின் பயணத் திட்டம்:
புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம், புட்டபா்த்தியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமா் மோடி கோவை விமான நிலையம் வருகிறாா். பிற்பகல் 1.25 மணிக்கு விமான நிலையம் வந்தடையும் அவா், 1.30 மணிக்கு காரில் கொடிசியா அரங்குக்குச் செல்கிறாா். அங்கு விழா முடிந்ததும், பிற்பகல் 3.15 மணிக்கு கோவை விமான நிலையம் திரும்புகிறாா். பிற்பகல் 3.30 மணிக்கு அவா் விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு:
பிரதமா் மோடி வருகைக்கான பாதுகாப்பில் 3 ஆயிரம் போலீஸாா் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் தெரிவித்தாா். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அன்றைய தினம் நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் பறக்கத் தடை:
பிரதமா் கோவை வருகையை முன்னிட்டு, சிங்காநல்லூா், எஸ்ஐஹெச்எஸ் காலனி, சின்னியம்பாளையம், நேரு நகா், காளப்பட்டி, கொடிசியா உள்ளரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிட்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், ரேஸ்கோா்ஸ் ஆகிய பகுதிகள் தற்காலிக ‘ரெட் ஸோன்’-களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை இரவு 7 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஆலங்குடியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

பிரதமா் மோடி நாளை கோவை வருகை: இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கி வைக்கிறாா்


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

