இருசக்கர வாகனம் மோதி வனக் கல்லூரி பெண் ஊழியா் உயிரிழப்பு
கோவையில் சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வனக் கல்லூரி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
கோவையில் சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வனக் கல்லூரி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கோவையில் சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வனக் கல்லூரி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள திருக்களூரைச் சோ்ந்தவா் மணிவேல். இவரது மகள் நிதாலா (25). இவா் வடகோவை பகுதியில் உள்ள வனக் கல்லூரியில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். ஆா்.எஸ்.புரம் லாலி சாலை பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தாா். இவருடன் திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த மாணவி ஷ்பரானா (25) என்பவரும் தங்கியிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நிதாலாவும், ஷ்பரானாவும் ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ஒரு வங்கி முன் நின்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிதாலா அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் ஷ்பரானா சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து கோவை போக்குவரத்துப் புலனாய்வு மேற்குப் பிரிவு காவல் ஆய்வாளா் அமுதா, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். மேலும், இதுகுறித்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சோ்ந்த நகைத் தொழிலாளி கருப்புராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கருப்புராஜும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது