இதுபோல் சிமெண்ட் விலை கடந்த 10 நாட்களில் 100 சதம் உயர்ந்துள்ளது. ரூ. 145 முதல்ரூ. 160 வரை விற்கப்பட்ட 50 கிலோ கொண்ட சிமெண்ட் மூட்டை, தற்போதுரூ. 280 முதல்ரூ. 290 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு, கட்டுமானத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. அதோடு, செயற்கையான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் விலையும் ஒரு சதுரடிக்குரூ. 100 வரையில் உயர்ந்துள்ளது. இது தவிர கட்டுமானத்திற்கான இரும்பு கம்பி விலையும் டன்னிற்குரூ. 3,000 வரையில் அதிகரித்துள்ளது.