அதாவது தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருப்பதால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8 முதல் ரூ.17 வரையிலான விலைக்கு வாங்கியே மின்வாரியம் தமிழகத்துக்கு வழங்கி வருகிறது. அப்படி இருக்கும்போதும் இங்கு அறிவிக்கப்பட்ட மின் வெட்டு தொடர்ந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே ரூ.9 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டும் தமிழக மின்வாரியம், யூனிட் வெறும் ரூ.2.13 செலவில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கு அக்கறை காட்டாமல், வெளி மார்க்கெட்டில், தனியாரிடம் பணம் கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.