ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகளான இறகுகள், தோல்கள், இறந்த குஞ்சுகள், சாணங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த எரிஉலைகள் அமைக்கப்படவில்லை. அப்பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கால்வாய், விவசாய நிலங்கள், சாலையோர குழிகளில் கொட்டிச்சென்று விடுகின்றனர். இதனால் பல்லடம் சுற்றுவட்டாரத்தில் சுகாதார பாதிப்புகள் அதிகரிப்பதுடன், நீர் நிலைகளில் கொடுக்கப்படும் அக் கழிவுகளால் தண்ணீர் மாசுபடுகிறது. கழிவுகளை உண்ணும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் அதிகரித்தும் வருகிறது.