இதில், மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் முதல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 7 எம்எல்டியும் (10 லட்சம் லிட்டருக்கு ஒரு எம்எல்டி), 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 27 எம்எல்டியும், புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் மூலம் (என்டிஏடிசி எல்) பவானியில் இருந்து வரும் 3வது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 22 எம்எல்டி குடிநீரும் என நாளொன்றுக்கு திருப்பூர் மாநகராட்சிக்கு 56 எம்எல்டி குடிநீர் வர வேண்டும். ஆனால், குடிநீர் பாதையில் ஏற்படும் பழுது காரணமாக நாளொன்றுக்கு 48 எம்எல்டி குடிநீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.