போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குடியாத்தத்தின் அடையாளம்தான் கெங்கையம்மன்

குடியாத்தத்தின் அடையாளமாகத் திகழ்கிறது கெங்கையம்மன். எங்கள் பண்பாட்டின் சிகரம்' என்கிறார் குடியாத்தம் கம்பன் கழகச் செயலாளர் கே.எம்.பூபதி.

News image
Updated On :19 மே 2026, 8:22 pm IST

'குடியாத்தத்தின் அடையாளமாகத் திகழ்கிறது கெங்கையம்மன். எங்கள் பண்பாட்டின் சிகரம்' என்கிறார் குடியாத்தம் கம்பன் கழகச் செயலாளர் கே.எம்.பூபதி, அவர் கூறியது:

''பெண்களைத் தெய்வமாக வணங்குவது தமிழர் மரபு. அவ்வாறு, எங்கள் பகுதி மக்களின் ஒட்டுமொத்தத் தெய்வம்தான் கெங்கையம்மன்.

வேலூர் மாவட்டத்தில் முக்கிய திருவிழாவான அம்மன் சிரசு பெருவிழா, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் திருவிழா. உலகில் எந்தப் பகுதியில் இருக்கும் வேலூர் மாவட்ட மக்கள் இந்தத் திருவிழாவுக்கு வந்து, அம்மனை தரிசிக்கின்றனர்.

கெளண்டன்ய மகாநதியின் கரையில் குடிகொண்டுள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா சில நூற்றாண்டுகளாக நடைபெறும் பிரசித்தி பெற்ற விழா. ஜாதி மத,இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, அமைதியாக நடைபெறும் அற்புதமான திருவிழா.

கெங்கையம்மனையும், அம்மன் சிரசுவைப் பார்த்தாலே பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழும். பார்த்த நேரத்தில் உடலும் புத்துணர்வை அடையும். உள்ளம் அமைதியுறும்.

நடுப்பேட்டையில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் வரும்போது, முஸ்லிம்கள் திரளாக நின்று வரவேற்பதும், பக்தர்களுக்கு குளிர்பானங்கள், உணவுகளை அளிப்பதும் தொன்றுதொட்டு நடைபெறுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு வேறு எங்கும் காணமுடியாது.

அம்மன் சிரசுவை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வரவேற்கின்றனர். தாய் வீட்டில் இருந்து விடைபெறும்போது, கண்ணீர் விட்டு வழியனுப்பி வைக்கின்றனர். குடியாத்தம் நகர மக்கள் எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், கெங்கையம்மனை நேரில் வழிபட்டோ, மனமுருக வேண்டியோ காரியங்களைத் தொடங்குவர்'' என்கிறார் பூபதி.

தொகுப்பு : கே.நடராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.