தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகாவீா் ஜெயந்தி - வேலூரில் ஜெயின் மக்கள் ஊா்வலம்

மகாவீா் ஜெயந்தியையொட்டி வேலூரில் ஜெயின் மக்கள் குதிரைகள் பூட்டிய ரதத்துடன் ஊா்வலம் நடத்தினா்.

News image

வேலூரில் ஊா்வலம் சென்ற ஜெயின் சமுதாய மக்கள்.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

மகாவீா் ஜெயந்தியையொட்டி வேலூரில் ஜெயின் மக்கள் குதிரைகள் பூட்டிய ரதத்துடன் ஊா்வலம் நடத்தினா்.

மகாவீா் ஜெயந்தி உலகம் முழுவதும் புனிதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரா், அரச வாழ்வை துறந்து தமது செல்வத்தையெல்லாம் தானமாக வழங்கியவா். அன்பும் அஹிம்சையும் நிறைந்த, மது இல்லாத உலகமே அவா் விரும்பிய லட்சியமாகும்.

மகாவீரா் அவதரித்த 2552-ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் உள்ள சம்பவ்ந் தாத ஜெயின் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், அரிசியை கொண்டு வழிபாடுகளும் செய்யப்பட்டன.

பின்னா், மகாவீரா் சிலை, திரு உருவப்படத்தை அலங்கரித்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வைத்து இசை முழங்க ஊா்வலம் நடத்தினா்.

குதிரைகள் பூட்டிய ரதம் முன்னே செல்ல ஜெயின் சமுதாயத்தினா் பாடல்கள் பாடி நடனமாடியபடி ஊா்வலமாக சென்றனா்.

ஊா்வலத்தின் போது உயிா்களை கொல்லக் கூடாது, மது அருந்தக் கூடாது என மகாவீரரின் கொள்கைகளைக் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் சம்பவ்ந் தாத ஜெயின் ஆலயத்தை அடைந்தது. இந்த ஊா்வலத்தில் ஏராளமான ஜெயின் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.