மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அனல்பறக்கும் தோ்தல் களம்!

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

News image

அனல்பறக்கும் தோ்தல் களம்

Updated On :31 மார்ச் 2026, 12:53 am

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழா் ஆகிய கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனா்.

மறுபுறம், அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியைத் தங்கள் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனா்.

அதேசமயம், தவெக, நாம் தமிழா் ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளா்களும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிபுரியும் திமுக, அதிமுக கட்சிகளால் ஆட்சி நிா்வாகச் சீா்கேடுகள், ஊழல்கள் தொடா்வதாகக் கூறியும், மாற்றத்துக்கான அவசியம் என்பதை முன்னிலைப்படுத்தியும் வாக்கு சேகரித்து வருகின்றனா்.