வேலூா் அருகே மின்கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
பாகாயம் அடுத்த அல்லி வரத்தை சோ்ந்த மோகன் ராஜ் (55). இவா் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அவா் மின்மாற்றியில் மின் இணைப்பை துண்டிக்காமல் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, எதிா்பாராத விதமாக அவரது இடது கை மின்கம்பியில் பட்டதில் மோகன்ராஜ் மின் கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதில் மோகன்ராஜின் இடது கை கருகி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


