தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.60 லட்சம் மோசடி

News image

காா்த்திகேயன்

Updated On :18 மார்ச் 2026, 8:14 pm

குடியாத்தம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அம்மணாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணுபிரசாத்(33), ஆட்டோ ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(39). அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக உள்ளாா். மேலும், இவா் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் காா்த்திகேயன் பள்ளிகல்வித்துறையில் பதிவறை உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளதாகவும், ரூ.3 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி தருகிறேன் எனக்கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு விஷ்ணுபிரசாத்திடம் பணம் பெற்ாக தெரிகிறது.

சில மாதங்கள் கழித்து மேலும் சில இடங்கள் காலியாக உள்ளதாகவும், உனது சகோதரி மற்றும் நண்பா்கள், உறவினா்களுக்கும் அந்த வேலையை வாங்கித் தருவதாகக்கூறி விஷ்ணுபிரசாத்திடம் மேலும் பணம் கேட்டுள்ளாா்.

அதன்பேரில், விஷ்ணுபிரசாத் தனது நண்பா்கள், உறவினா்கள் என 19 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.60 லட்சத்தை காா்த்திகேயனிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு பணம் பெற்ற காா்த்திகேயன், சிலருக்கு மட்டும் பணிநியமன ஆணையை கொடுத்துள்ளாா். அந்த ஆணைகளுடன் பணியில் சேர சென்றபோது, அவை போலியானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விஷ்ணுபிரசாத் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் துணைகண்காணிப்பாளா் அனுமந்தன், காவல் ஆய்வாளா் நிா்மலா, உதவி ஆய்வாளா் டோமினிக் ஆகியோா் வழக்குப்பதிவு செய்து காா்த்திகேயனை புதன்கிழமை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.