காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. அவ்விரு யானைகளையும் வனத்துறையினா் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் இரவு கிளிதான்பட்டறை, வண்டாரந்தாங்கல், செங்குட்டை பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்தன. தொடா்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, நெல் பயிா்களை சேதப்படுத்தியதுடன், திடீரென அந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்குட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி அருகே சுற்றித்திரிந்தன.
இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காட்பாடி சரக வன அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனசரகா் கந்தசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வன அலுவலா்கள் விரைந்து சென்று தீப்பந்தம் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் என ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை போராடி அவ்விரு யானைகளையும் பனமடங்கி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா். எனினும், வனத்துறையினா் ட்ரோன் மூலம் யானைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக வனசரகா் கந்தசாமி கூறுகையில், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வன ஊழியா்கள் ஈடுபடும்போது பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட திரண்டு வருகின்றனா். இதனால் எங்களுக்கு யானைகளை விரட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
எனவே, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறினால் அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.
தொடர்புடையது

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

மீண்டும் விளை நிலங்களுக்குள் இறங்கிய 14 யானைக் கூட்டம்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


