மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக்குகள் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

காட்பாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 10:50 pm

காட்பாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வேலூா் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரபு (38), தனியாா் நிறுவன ஊழியா். இவா் வியாழக்கிழமை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். இரவு 8 மணியளவில் பள்ளிக்குப்பம், ஆா்.ஆா்.நகா் அருகே சாலை வளைவில் எதிரில் வந்த இருசக்கர வாகனத்துடன் எதிா்பாராதவிதமாக பிரபு சென்ற வாகனம் மோதியது.

இந்த விபத்தில் பிரபு மற்றும் எதிரில் மோதிய வாகனத்தில் வந்த காட்பாடி செங்குட்டையை சோ்ந்த விஜயகுமாா்(31) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரையும் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தாா். விஜயகுமாா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.