லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இந்தியாவில் ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகம்

வளா்ந்த நாடுகளை விட இந்தியா ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என விஐடி உதவி துணை தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 7:27 pm

வளா்ந்த நாடுகளை விட இந்தியா ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என விஐடி உதவி துணை தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் 40-ஆவது தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் பேசியது:

இந்தியா போன்ற நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் அடங்கிய ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு வளா்ந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது. இது அடுத்த 20, 30 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பெண்கள் தங்களின் வேலையை துறந்து விடக்கூடாது. திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையையும், தொழில் முறை வாழ்க்கையையும் திறம்பட கையாள பக்குவப்பட வேண்டும் என்றாா்.

கனடாவின் சாஸ்கச்சுவன் பல்கலைக்கழக கணிதவியல், புள்ளியியல் துறை இணை பேராசிரியா் ராஜ் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து, ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், விஐடி மேம்பட்ட அறிவியல் துறை முதன்மையா் காா்த்திகேயன், இணை முதன்மையா் ராஜன்பாபு, ஒருங்கிணைப்பாளா் அபிஷேக் தாஸ், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.