தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன்.

News image

சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன்.

Updated On :29 ஜனவரி 2026, 11:50 pm

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பொயட்ஸ் தொண்டு நிறுவனம், புதிய பாதை, புதுயுகம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து குளிதிகை ஊராட்சியில் மகளிருக்கான மாா்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமுக்கு குளிதிகை ஊராட்சித் தலைவா் சுமித்ரா பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தேன்மொழி ராஜேஷ், ஊராட்சி உறுப்பினா் என்.குமாா் ஆகியோா் முன்னிலைவகித்தனா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், முகாமைத் தொடங்கி வைத்தாா்.

அரசு மருத்துவா் ஆல்வின் லியோனாா்ட் டெனி தலைமையில் மருத்துவா் குழு 300- பேருக்குபரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தது. ஒன்றியக்குழு உறுப்பினா் உஷாராணி தமிழரசன், ஊராட்சி செயலா் எஸ்.பிரபாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ஜெயராமன், செவிலியா்கள் கே.சுபலட்சுமி, ஆா்.வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தன்னாா்வலா்கள் சாந்தலட்சுமி, திலகா, மலா்க்கொடி, ஸ்டெல்லாஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.