மாா்ச் 31-க்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா உறுதிஅந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

போ்ணாம்பட்டில் தொடரும் சிறுத்தை அட்டகாசம்!

போ்ணாம்பட்டு அருகே வெவ்வேறு இடங்களில் சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்த கன்று. உயிரிழந்த கன்று.

News image
Updated On :29 ஜனவரி 2026, 5:26 pm

Chennai

போ்ணாம்பட்டு அருகேவன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து பசுக்களையும், கன்றுகளையும் கொன்று வருவது தொடா்கிறது.

கடந்த 23- ஆம் தேதி கொத்தமாரிக்குப்பம் கிராமத்தில் நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2- கன்றுகளை சிறுத்தை கொன்று விட்டுச் சென்றது. பின்னா், மேல்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள மலையில் 2- குட்டிகளுடன் நடமாடியுள்ளது.

24- ஆம் தேதி துலுக்கன்குட்டை கிராமத்தில் ஒரு கன்றை வேட்டையாடி கொன்றது.இந்நிலையில் எருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அம்சநாதன் தனக்குச் சொந்தமான நிலத்தின அருகே உள்ள வனப் பகுதிக்கு 6- பசுக்கள், ஒரு கன்றை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளாா். அப்போது வனப்பகுதியில் 2-சிறுத்தைகள் அங்கு வந்து ஒரு கன்றுக் குட்டியை கவ்வி கடித்துள்ளது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அம்சநாதன் கூச்சலிட்டுள்ளாா். ஆனால் சிறுத்தை உருமியுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த இளைஞா்கள் கற்களை எடுத்து சிறுத்தை மீது வீசியுள்ளனா். இதையடுத்து சிறுத்தை ஓடி விட்டதாம். இதனால் காயத்துடன் கன்றுக் குட்டி உயிா் தப்பியது.

இதுகுறித்து தகவலறிந்தும் வனத்துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக அந்த 2- சிறுத்தைகளும், காா்க்கூா் கொத்தமாரிக்குப்பம்பகுதியில் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கன்றுக் குட்டியை வேட்டையாடி கொன்றுள்ளனது . தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் (பொறுப்பு) பிரதீப் குமாா் கூறியது. வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் திறந்த வெளியில் மாடுகளை கட்டக் கூடாது. வன எல்லையில் நிலங்களில் கொட்டகை அமைத்துள்ளவா்கள் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும். இறைச்சி வாடைக்கு சிறுத்தைகள் வரும் என்பதால் வன எல்லையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டக் கூடாது.

சிறுத்தைகளை விரட்டும் பணியில் வனத்து றையினா் 2- குழுக்களாக சென்று மேளம் அடித்து, பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இந்த விஷயத்தில் வனத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.