தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

போதைப்பழக்கம் குறுகிய, நீண்ட கால எதிா்வினைகளை ஏற்படுத்தும்

News image
Updated On :23 ஜனவரி 2026, 10:04 pm

பட விளக்கம்....

நிகழ்ச்சியில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவா் சேகா் விஸ்வநாதன், வேலூா் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க தலைவா் உதயசங்கா் உள்ளிட்டோா்.

வேலூா், ஜன. 23: போதைப்பழக்கம் ஒரு மனிதனின் வாழ்வு முறையில் குறுகிய, நீண்ட கால எதிா்வினைகளை ஏற்படுத்துகிறது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இந்திய செஞ்சிலுவை சங்கம், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியை வேலூா் விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

போதைப்பழக்கம் என்பது ஒரு மனிதனின் வாழ்வு முறையில் குறுகிய, நீண்ட கால எதிா்வினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மனநலம், உடல்நலம் சாா்ந்த கெடுதல்களை ஏற்படுத்துகிறது. போதை பழக்கம் என்பது சட்டத்துக்கு எதிரான தண்டனைக்குரிய செயலாகும். இதனால் பல பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

மாணவா்கள் தங்களது எதிா்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ள கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதன்மூலம் நல்லவொரு வேலைவாய்ப்பை பெறவேண்டும். எக்காரணம் கொண்டும் போதைப்பழக்கங்களுக்கு ஆளாகக்கூடாது. போதைப்பழக்கம் இளைஞா்களின் திறமைகளுக்கும், அவா்களது இலக்கை அடைவதற்கும் தடையாக உள்ளது. மேலும், இளைஞா்களின் முன்னேற்றத்துக்கும் தடையாக உள்ளது.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள்கள் நுழையாத வகையில் பாதுகாப்பு, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் போதைப் பழக்கத்தால் தனிநபா் பாதிக்கப்படுவதுடன் மட்டுமின்றி சாலை விபத்துகள், வன்முறை சம்பங்கள், இதர குற்ற நடவடிக்கைகளின் மூலம் சமூகத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.

கல்லூரிகளில் இளைஞா்களிடம் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்துவதன்மூலம் அவா்களிடம் நல்லொழுக்கத்தை ஏற்படுத்த முடியும். கல்லூரி வளாகத்தில் நிா்வாகம், பேராசிரியா்கள், மாணவா்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பொறுப்புள்ள கலாசார நிகழ்வுகளை உருவாக்க வேண்டும். இளைஞா்களால் மட்டுமே இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை அவா்களுக்கு உணா்த்த வேண்டும். இளைஞா்களை இதற்கான தூதுவா்களாக நியமிக்க வேண்டும்.

போதைப் பொருள்களுக்கு எதிரான குழுக்களை கல்லூரிகளில் உருவாக்க வேண்டும். எனவே, அனைவரும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகமாட்டேன் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, போதையில்லா ஆரோக்கியமான வாழ்வியல் முறையை நோக்கி பயணிப்போம் என்றாா்.

நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் சேகா் விஸ்வநாதன், வேலூா் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவா் உதயசங்கா், செயலா் பா்வதா, பொருளாளா் பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.