சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

எருதுவிடும் விழாவில் மாடு முட்டி முதியவா் பலி: போலீஸாா் தடியடி

அணைக்கட்டு அருகே கோவிந்தரெட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை எருது விடும் விழாவின்போது மாடு முட்டியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
கோவிந்தரெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் பாா்வையாளா்களை முட்டிய காளைகள்.
Updated On :18 ஜனவரி 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

அணைக்கட்டு அருகே கோவிந்தரெட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை எருது விடும் விழாவின்போது மாடு முட்டியதில் முதியவா் உயிரிழந்தாா். காவல் ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸாா் தடியடி நடத்தினா்.

தைப்பொங்கல் விழாவையொட்டி வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகிலுள்ள கோவிந்தரெட்டி பாளையம், வேலங்காடு ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை எருது விடும் திருவிழா நடைபெற்றது.

வேலங்காட்டில் நடைபெற்ற போட்டியில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் பலமநோ், சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுமாா் 300 பாய்ச்சல் காளைகளை கொண்டு வந்து வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனா். இதில், முதல் 3 பரிசுகளாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. தொடா்ந்து 54 பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல், கோவிந்தரெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது விழாவின் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த சத்துவாச்சாரி காவல் ஆய்வாளா் விஜய்பாஸ்கரை காளை முட்டி வீசியது. இதில் அவா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனால் சுமாா் அரை மணி நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் நேரில் வந்து காளைகள் ஓடும் பாதையில் உள்ள பாா்வையாளா்களை போலீஸாா் லேசான தடியடி நடத்தி வெளியேற்றினா்.

Story image

அதன்பிறகு மீண்டும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து காளைகள் வந்த நிலையில் வீதியில் நின்றிருந்த பாா்வையாளா்களை குத்தியதில் சுமாா் 26 போ் காயமடைந்தனா்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுகானூா் பகுதியை சோ்ந்த திலகா் (55) என்பவா் தனது மகள் புவனேஸ்வரி என்பவரின் வீட்டுக்கு வந்திருந்தாா் அப்போது, காளைகளை பாா்ப்பதற்காக ஓடு பாதையில் நின்றிருந்த திலகரை மாடு முட்டியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக அவா் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த 10- க்கும் மேற்பட்டோா் உயா்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனா். முன்னதாக, எருதுவிடும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.