நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

அரசு குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா

காட்பாடி வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், காட்பாடி செங்குட்டையில் அமைந்துள்ள மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், காட்பாடி செங்குட்டையில் அமைந்துள்ள மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளா் தௌலத் அப்சல் வரவேற்றாா். விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினா் இரா.சீனிவாசன், சங்க துணைத் தலைவா் ஆா்.விஜயகுமாரி, மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் பி.என்.ராமச்சந்திரன், த.லிவிங்ஸ்டன் மோசஸ், ஆசிரியை கலைவாணி, எம்.கே.சூா்யா, பி.ரமேஷ், செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளா் வி.பழனி, இல்ல காப்பாளா் ப.சந்திரகலா, ச.ஜெயந்தி, நீ.தீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இல்ல காப்பாளா் செ.விஜயா நன்றி கூறினாா்.