நிதிச்சுமை இருந்தாலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம்: அமைச்சா் துரைமுருகன்
அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படுகிறது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.


அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படுகிறது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் 699 நியாய விலை கடைகள் மூலம் அரிசி பெறும் 4 லட்சத்து 55 ஆயிரத்து 498 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட அரசு மொத்தம் ரூ.141.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி காட்பாடி ஒன்றியம், மேல்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கி அமைச்சா் துரைமுருகன் பேசியது:
நிகழாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும். பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.3,000 ஒரு குடும்பத்துக்கு வழங்குவது என்பது அரசுக்கு சாதாரண விஷயமல்ல. இதனால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும். இவற்றையெல்லாம் கடந்துதான் முதல்வா் இந்த தொகையை வழங்கியுள்ளாா்.
மக்களுக்கு செய்கிற ஒரு அரசாங்கம் நீடிக்க வேண்டும். அதற்குத்தான் மக்கள் ஆதரவை கேட்கிறோம். அவரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். படித்த இளைஞா் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் காட்பாடி தொகுதியில் மட்டும் 3 இடங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளது என்றாா்.
தொடா்ந்து, பொன்னை, மாதாண்ட குப்பம், எருக்கம்பட்டு, கொல்லப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலை கடைகளின் குடும்ப அட்டைதாரா்களுக்கும் அமைச்சா் துரைமுருகன் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், துணை மேயா் எம்.சுனில் குமாா், காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வே.வேல்முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ச.திருகுணஐயப்பதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...